தோனியின் ஓய்வை பற்றி முக்கிய தகவல் கூறிய – கோலி!

கடந்த 09-ம் தேதி  நடந்த  முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி , நியூஸிலாந்து அணி உடன்  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. முதலில் விளையாடி நியூஸிலாந்து அணி  239 ரன்கள் இலக்காக வைத்தது. இந்திய அணி 240 என்ற இலக்குடன் களமிங்கி  49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 221 ரன் எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டி முடித்த பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய கேப்டன் விராட் கோலி , பந்து வீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு நியூஸிலாந்து அணியை  அதிக ரன்கள் அடிக்க விடாமல் செய்தோம். பேட்டிங்கில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உடன் களமிறங்கினோம்.

 ஆனால் நியூஸிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பந்துகளை வீசினர். முதலில் விளையாடிய 45 நிமிட மோசமான ஆட்டம் என கூறினார்.இந்த சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் தோனியின் ஓய்வை பற்றி கேட்டபோது  இதற்கு பதிலளித்த கேப்டன் கோலி , தோனி தனது ஓய்வை பற்றி எதுவும் எங்களிடம் பேசவில்லை என கூறினார்.
author avatar
murugan