விக்கிரவாண்டியில் உள்ள ஒரு சாவடியில் எந்திரம் கோளாறு ..!

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைப்பெறும்.
இந்நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எந்திரகோளாறால் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தபட்டு உள்ளது.235ஆவது எண் கொண்ட இந்த  வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

author avatar
murugan