அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்-பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து மத்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள  இடைத்தேர்தல் தொகுதிக்கான தேதியை  அறிவித்தது தேர்தல் ஆணையம்.அதன்படி  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தேர்தல் குறித்து விழுப்புரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து மத்திய தலைமை தான் முடிவு செய்யும் .தமிழகத்தில் தமிழ் அழிந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.