உலகக்கோப்பை கால்பந்து கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்த இந்திய அணி..!

2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 ஆசிய அணிகளை எட்டு பிரிவுகளாக பிரித்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி “இ” பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் டிரா , ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
வெற்றி பெற வேண்டும் என்ற முக்கியமான போட்டியில் ஓமன் அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி சந்தித்தது.
ஆனால் இந்திய அணி ஓமன் அணியை சொந்த மண்ணில் வீழ்த்த முடியவில்லை. போட்டியின் முதல் பாதியில் ஓமன் அணி ஒரு கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தது. அதன் பின்னர் நடந்த இரண்டாவது பாதியில்  இந்திய அணி கோல் அடிக்க முயற்சி செய்தும் அடிக்கமுடியவில்லை , அதேபோன்று ஓமன் அணியும் கோல் அடிக்கவில்லை இதனால் இறுதியில் 1 -0 என்ற கணக்கில் ஓமன் அணிவெற்றி பெற்றது.
இதனால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி நுழைவதற்கான வாய்ப்பை இழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan