நாளை போட்டி …!இன்றே இந்திய அணியை அறிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்…!

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்தது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்கிய  இந்திய அணி ,கேப்டன் கோலி ,துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 326 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.கேப்டன் கோலி  140 ரன்களும் , துணை கேப்டன் ரோஹித் சர்மா 152 ரன்களும் எடுத்தனர்.
இதேபோல்  நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்  இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, சையது கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Comment