மனைவியை வெட்டிக்கொன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்!

புதிவண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தவர் நரேஷ். இவர் புழல் பகுதியில் வசித்து வந்து உள்ளார்.இவரது மனைவி ஜெயாஸ்ரீ. கடந்த  7 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வருண் என்ற மகன் உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது.சில நாள்களுக்கு முன் ஜெயாஸ்ரீ கோபித்து கொண்டு பெரம்பூரில் உள்ள தனது சகோதரர் சரவணன் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதை தொடர்ந்து  சரவணன் வீட்டிற்கு அங்கு சென்ற நரேஷ் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்க்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்க்கு வந்த பிறகு நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது ஜெயாஸ்ரீ வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.

காவலர் நரேஷ் தூக்கில் தொங்கியபடி இறந்து உள்ளார். உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

author avatar
murugan