குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் – கமலஹாசன்

குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை அரசு கருத்தில் கொண்டு, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.