சுவையான துவரைக்காய் குருமா

சுவையான துவரைக்காய் குருமா

  • சுவையான துவரைக்காய் குருமா செய்வது எப்படி?

துவரைக்காய் என்பது, காய்ந்து, தோலுரித்த துவரம் விதைகளிலிருந்து துவரம் பருப்பு எடுக்கப்படுகிறது. அதே துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

Image result for துவரைக்காய்

தற்போது நாம் இந்த துவரைக்காயை வைத்து எப்படி குருமா செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • துவரைக்காய் -கால் கிலோ
  • பெரிய வெங்காயம்  – 1
  • தக்காளி  -2
  • பூண்டு  – 4 பற்கள்
  • தேங்காய் – 4 பெரிய துண்டுகள்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள்-­ அரை டீஸ்பூன்
  • கருவேப்பிலை­ – ஒரு கொத்து
  • உப்பு ­ – தேவையான அளவு

செய்முறை

துவரைக்காயிலிருந்து கொட்டைகளை உதிர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயுடன் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.

Image result for துவரைக்காய் குருமா

இதனையடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியைப் போட்டு கூழாகும்வரை வதக்க வேண்டும். இதில் உதிர்த்த துவரைக்கொட்டைகளைப் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கொட்டைகள் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும்.

அதன்பின், கொட்டைகள் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கருவேப்பிலைப் போட்டு குழம்பை அடுப்பிலிருந்து இறக்குங்கள்.இந்த குருமாவை இட்லி, தோசை மற்றும் சோற்றுடன் கலந்து சாப்பிடலாம். இப்பொது சுவையான துவரைக்காய் குருமா தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *