ஆண் குழந்தைக்காக 11 பெண் குழந்தைகளை பெற்ற பெண்..!

ஆண் குழந்தைக்காக 11 பெண் குழந்தைகளை பெற்ற பெண்..!

இந்தியாவில் சில தம்பதிகளில் ஆண் குழந்தை மேல் உள்ள மோகத்தால் ஆண் குழந்தை பிறக்கும் வரை குழந்தைகள் பெற்றுக் கொள்வதை நிறுத்துவதே இல்லை இது போன்ற காரணத்தினால் தான் நாட்டில் அதிக பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் மாவட்டம் சுரு மாவட்டம் , ஜாத்சர் நகரை சார்ந்த கதி என்ற பெண்  தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் எனதீர்மானம் செய்துள்ளனர். இதனால் இவர் தொடர்ந்து 11 பெண் குழந்தைகளை பெற்றுள்ளார். ஆண் குழந்தை பெற்று எடுக்காததால் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் இந்த தம்பதி கேலியாக பேசியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி இவருக்கு 12-வது குழந்தை ஆண் குழந்தை பிறந்தது. இதில் முதல் மகளுக்கு 22வயதாகிறது. இதில் 2 மகள்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதற்கு முன் மத்திய பிரதேசம் சார்ந்த லட்சுமி என்ற பெண் 10 பெண் குழந்தைகளை பெற்றார். 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 வது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.
அதேபோல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண் 12-வது  குழந்தையாக  ஆண் குழந்தை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube