ஆற்றங்கரையில் நடந்த உல்லாசம்!பின்னர் நடந்த விபரீதம்!

ஆற்றங்கரையில் நடந்த உல்லாசம்!பின்னர் நடந்த விபரீதம்!

  • ஆற்றங்கரைக்கு திருமணம் செய்து கொள்வதாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்து கழுத்தை அறுத்து கொலை செய்த ஜோதிடர்.
  • பின்னர் காவல்துறையினரிடம் தாமாகவே முன்வந்து சரணடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே ஆண்டிவலசை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் ஆவார்.இவர் அப்பகுதியில் ஜோதிடராக பணிபுரியும் கந்தசாமியின் மகள் ஆவார்.

இந்நிலையில் வெள்ளையம்மாளுக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த நபருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.பின்னர் திருமணமான மூன்று மாதங்களில் கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ளனர்.

இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது தந்தையான ஜோதிடர் கந்தசாமி வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அப்பகுதியில் உள்ள முத்து என்ற ஜோதிடருக்கும் வெள்ளையம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஜோதிடர் முத்து வெள்ளையம்மாளிடம் அடிக்கடி பணம் பெற்று சந்தோசமாக செலவழித்து வந்துள்ளார்.

இதனால் ஒருகட்டத்தில் உஷாரான வெள்ளையம்மாள் விரைவில் தம்மை திருமணம் செய்துகொள்ளுமாறு முத்துவிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.ஆனால் முத்து தமக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அறவே இல்லை என்று கூறி தப்பி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 11-ம் தேதி வெள்ளையம்மாளை தொலைபேசியில் அழைத்த முத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடையூருக்கு வந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

முத்துவின் பேச்சை நம்பி திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் வந்த வெள்ளையம்மாளை முத்து ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று தனது ஆசை தீரும் வரை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

பின்னர் அப்பகுதியில் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.பின்னர் வெள்ளையம்மாளின் உடலை ஆற்றங்கரை ஓரத்திலேயே புதைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் தனது மகளை காணவில்லை என்று ஜோதிடர் கந்தசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் வெள்ளையம்மாளை தாம் கொலை செய்து விட்டதாக காவல்துறையினரிடம் முத்து சரணடைந்துள்ளார்.இந்நிலையில் முத்துவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube