ஒரு பந்துகூட வீசவில்லை ! முதல் ஒருநாள் போட்டி ரத்து

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  விளையாடுகிறது.

இன்று முதல் ஒருநாள் போட்டியானது இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டது.இதன்  காரணமாக மைதானத்தில் ஈரப்பதம்  இருந்தது.இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி  ஒரு பந்துகூட வீசப்படமால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.