இறுதியானது தொகுதி பங்கீடு ! முதலமைச்சர் யார் ? உத்தவ் தாக்கரே தகவல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற 21-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றது.இதற்கான தொகுதி பங்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பாஜக 288 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.சிவசேனா 126 தொகுதிகள் போட்டியிடுகின்றது.14 தொகுதிகளில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் போட்டியிடுகின்றது.
மேலும் முதலமைச்சர் யார் என்பதை தேர்தல் முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.