போர் விமானம் விழுந்து நொறுங்கியது…..விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தின்  பொக்ரான் பகுதியில் இந்திய ராணுவ விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 என்ற ரக போர் விமானத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

யாருமே எதிர்பார்க்காமல் நடைபெற்ற இந்த விபத்தில், விமானத்தில் பயணித்துக்கொண்டு இருந்த விமானி பாராசூட்_டை வைத்துக்  குதித்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தார். இது தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment