கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின…!!

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா முன்னேற்பாடு குறித்து இலங்கை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 15-16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.அந்த திருவிழாவிற்கு ஆண்டுதோறும் இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும்அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்

இந்தியாவிக்கு சொந்தமான கச்சத்தீவு 1975 ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் அன்று முதல்  இலங்கை அதிகாரிகள் திருவிழா நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் திருவிழாவிற்கான கடல் போக்குவரத்து, உணவு, தங்கும் இடம், சுகாதாரம், படகு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து இலங்கையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment