பைக் ரேசில் ஈடுபட்ட 2 இளைஞர்களுக்கு அடி, உதை…

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், பைக் ரேசில் ஈடுபட்டு, சிறுமிக்கு படுகாயம் ஏற்படுத்திய 2 இளைஞர்களை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். குளச்சலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அதிகாலையில் பைக் ரேசில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக புகார்கள் உள்ளது.Image result for பொதுமக்கள் அடித்து உதைஇன்று காலை குளச்சல் கோடிமுனை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், 5 பைக்குகளில் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். குளச்சல் பஸ் நிலையம் அருகே, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ரேஸ் பைக் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த சுபேர் மற்றும் அவரது மகள் 5-ம் வகுப்பு மாணவி ஹரிஷா தூக்கி சாலையில் வீசப்பட்டனர். படுகாயமடைந்த சிறுமியையும், அவரது தந்தையையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்கள் அதிவேகத்தில் பைக் ரேசில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்திய 2 இளைஞர்களையும் அடித்து உதைத்தனர். ஒரு கட்டத்தில் இரண்டு இளைஞர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பைக் ரேஸ் சம்பவங்களை போலீசார் கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment