தனது 6000சதுர அடி வீட்டை கொரோனா தனிமைப்படுத்தும் முகாமாக்கிய பிரபல தொழிலதிபர்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த பலரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தனது 6000 சதுர அடி பரப்புள்ள வீட்டை முகாமாக பயன்படுத்த ஆமமுக நகரச் செயலாளர் தென்னரசு சாம்ராஜ் அனுமதி அளித்துள்ளார்.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 715 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 158 பேர் என மொத்தம் 873 பேரை தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தனது 6000 சதுர அடி வீட்டை தனிமைப் படுத்தும் முகமாக பயன்படுத்திக்கொள்ள தென்னரசு சாம்ராஜ் அனுமதித்துள்ளார்.

அந்த வீட்டில் 50க்கும் மேற்பட்டோர் படுக்கும் வகையில் உள்ளது என அவர் கூறினார். மேலும், இது தொடர்பாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் அவர் முறையான தகவலை தெரிவித்துள்ளார்.