கஜா புயல் பாதிப்பு எதிரொலி…!பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு …!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பை அடுத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Comment