கஜா புயல் எதிரொலி …!நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து…! பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு …!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது.அதேபோல் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திலும் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல்  திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Comment