திமுகவினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் – ஸ்டாலின்

  • ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.  
  • வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிதாக  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது .இதற்கான வாக்கு  எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உள்ளாட்சி சட்ட விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என கவனித்து, அத்துமீறல்களையும், முறைகேடுகளையும் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.