போராடும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றார்கள் என்று அதிமுக அரசு பொய் சொல்லுகின்றது என்று அ.ம.மு.க துணை பொது செயலாளர் T.T.V தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் T.T.V தினகரன் பேசுகையில் , அரசு அதிகார மமதையில் பேசுகின்றது , அடாவடித்தனமாக பேசியல்படுகின்றது.95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார் என்ற தகவல் பொய்யானது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கை_கள் குறித்து அழைத்து பேச வேண்டும். நங்கள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்.
போராட்டம் நடத்து அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர் என பொய்யான தகவலை அரசு தெரிவித்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 1 தொகுதியில் கூட டெப்பாசிட் கிடைக்காது இது சேலஞ் என்று தெரிவித்தார்.