இறந்த பிச்சைக்காரர் வங்கி கணக்கில் ரூ. 8.77 லட்சம்..!

மும்பையில் உள்ள மன்கரட் -கோவண்டி ரயில்வே நிலையத்திற்கு இடையே உள்ள  தண்டவாளத்தில் ரயில் மோதி வயதான ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் யார் என விசாரித்தபோது ,அங்கிருந்தவர்கள் இவர் ஆசாத் எனவும் இவர் ரயில் நிலையத்திற்கு அருகே பிச்சை எடுப்பவர் என கூறினார்.
இதை அடுத்து ரயில் நிலையத்திற்கு அருகே உள்ளஒரு குடிசையில் அவர் வசித்து வந்தது என்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அந்த குடிசையிலிருந்து நான்கு பெரிய டப்பாக்கள் இருந்தன.அதில் சில்லரை காசுகள் 1.75 லட்சம் இருந்தது. பின்னர் ஒரு இரும்புப் பெட்டி இருந்து வங்கி கணக்கு புத்தகம் இருந்தது. அதில் 8.77 லட்சத்துக்கான வங்கி வைப்பு   தொகைகான  ரசீது இருந்தன.
மேலும் வங்கி கணக்கு புத்தகத்தில் நாமினியாக இவரது மகன் சுகதேவ் பெயர் இருந்தது. இதில் ராஜஸ்தானில் உள்ள முகவரியில் இருந்தது. இதையடுத்து சுகதேவை  தொடர்பு கொண்ட போலீசார் தகவல் கொடுத்தனர். மும்பை வந்து உடலை பெற்றுக் கொள்வதாக சுகதேவ் கூறினார்.

author avatar
murugan