இன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் – அதிபர் ட்ரம்ப்

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. உலக முழுவதும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளான சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், ஸ்பெயின் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா. தற்போது அமெரிக்காவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 1,42,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,485 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தடுமாறி வருகிறது.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய டிரம்ப், கொரோனா பரவல் தொடர்ந்து இருப்பதான் காரணமாக நாடு முழுவதுமான ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டு கொண்டார். இன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் என குறிப்பிட்டுள்ள அவர், அதிக உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்க சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என கூறியுள்ளார். மேலும் ஜூன் 1ம் தேதிக்கு பின்னர், கொரோனாவிலிருந்து நாம் முழுவதுமாக மீள்வோம் என குறிப்பிட்டார்.  

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்