அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்த மரண கால்குலேட்டர்! இதன் பின்னணி என்ன தெரியுமா?

அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் மரண கால்குலேட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கால்குலேட்டர் மக்களுக்கு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்பது தான் மருத்துவர்களின் முக்கிய நோக்கம்.
இன்று நம்முடைய  ஆரோக்கியமான உணவு முறைகள் மறக்கடிக்கப்பட்டு, பாஸ்ட் புட் கலாச்சாரம் தான் மேலோங்கி நிற்கிறது. இதனால், இன்று அதிகமானோர் இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, கிட்னி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்த கால்குலேட்டரின் நோக்கம் என்னவென்றால், மனித உடலில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் ஆராய்கிறது. சர்க்கரை, ரத்த பரிசோதனை என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, உணவு முறை பரிந்துரை, வாழ்க்கை வடிவமைப்பு ஆகியன குறித்த போதனைகளையும் வழங்குகிறது.
மக்கள் அன்றாடம் தாங்கள் செய்யும் உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள தவறு, வாழ்க்கை முறை தவறுகள் ஆகியன காணொளி விளக்கத்துடன் மக்களுக்கு எடுத்து உரைக்க இந்த கால்குலேட்டர் பயன்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் கருத்து என்னவனெறால், முழு உடல் பரிசோதனையின் அடுத்தகட்ட முயற்சியே இந்த மரண கால்குலேட்டர் என்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.