நகையை சாப்பிட்ட மாடு..! சாணத்திற்காக காத்து இருந்த தொழிலதிபர் குடும்பத்தினர்..!

ஹரியானா  மாநிலத்தை சார்ந்த ஜனக் என்கிற தொழிலதிபரின் மனைவி மற்றும் மருமகள் இருவரும் கடந்த மூன்று வாரத்திற்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்துள்ளன. வீட்டுக்கு வந்து அவர்கள் இருவரும் தங்க நகைகளை சமையல் அறையில் உள்ள ஒரு டப்பாவில் வைத்து தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கினர்.
இது தெரியாமல் வீட்டில் இருந்த மூதாட்டி வீணா போன காய்கறிகளை அந்த டப்பாவில் போட்டு குப்பையில் வீசியுள்ளார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த காளை ஒன்று காய்கறி சாப்பிட்டுவிட்டு சென்றது.  இதைத்தொடர்ந்து நகை காணாமல் போனதை அறிந்த ஜனக்  அங்குமிங்கும் தேடியுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வீணா போன காய்கறிகளுடன் சேர்த்து காளை சாப்பிட்டது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஐந்து மணி நேரம் தேடுதலுக்கு பிறகு அந்த காளை மாட்டை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த மாட்டிற்கு உணவு தண்ணீர் கொடுத்து கட்டி வைத்து மாட்டின் சாணத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

author avatar
murugan