சீனப்பெண்ணின் காதுக்குள் குடியிருந்த கரப்பான் பூச்சி குடும்பம்!

சீனப்பெண்ணின் காதுக்குள் குடியிருந்த கரப்பான் பூச்சி குடும்பம்.

கடந்த புதன்கிழமை சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சென் என்ற பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று மருத்துவரிடம், தனக்கு காதில் ஏற்பட்டுள்ள வலி குறித்து கூறியுள்ளார். மீது அவர் இதுகுறித்து கூறுகையில், கரப்பான் பூச்சியின் குடும்பம் தனது காதுக்குள் வாழ்வதாக கூறியுள்ளார்.

கரப்பான்பூச்சி என் காதுக்குள் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை, ஆனால் நான் என் காதை ஒரு குச்சியால் தோண்டும்போது அது இன்னும் ஆழமாக ஊர்ந்து செல்வதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர்கள், மருத்துவ கருவியின் உதவியோடு, அவரது காதிற்குள் இருந்த கரப்பான் பூச்சியை அறுவை சிகிச்சை இன்றி வெளியே எடுத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், இந்த பூச்சியை அகற்றல் விட்டிருந்தால், மிகப் பெரிய அளவிலான சேதத்தை சந்தித்து இருக்க கூடும்.

மேலும், மருத்துவர் மேலும் தங்கள் வீடுகளில் பூச்சி விரட்டிகளை அடிக்கடி பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதோடு, பருத்தி மொட்டுகள் அல்லது காது துடைப்பங்களால்  பூச்சிகளைத் தாங்களே அகற்ற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.