எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது ! – வங்கதேச வீரரின் அரிய தகவல்

எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது என்று வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் கூறியுள்ளார். 

பேஸ்புக் லைவ்வில் பேசிய வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் “எனக்கும் விராட் கோலிக்கும் உள்ள மோதல் 2008ம் ஆண்டு U19 போட்டிகளில் தொடங்கியது. U19 போட்டிகளில் இருந்தே விராட் கோலிக்கு எதிராக வங்கதேசத்தில் விளையாடி வருகிறேன். அப்போவே எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். U19 போட்டிகளில் கோலி எங்கள் பேட்ஸ்மேன்களை பல முறை அவமானப்படுத்தி ஆதாயமடைந்துள்ளார். தென்னாப்பிரிக்கா முத்தரப்பு போட்டியிலும் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்” என்றார்.

 

author avatar
Vidhusan