மும்பை அணிக்கு 131 ரன்கள் இலக்காக வைத்தது சென்னை அணி!!

மும்பை அணிக்கு 131 ரன்கள் இலக்காக வைத்தது சென்னை அணி!!

2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் -மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிவருகிறது.

இந்த போட்டியானது, சென்னையில் உள்ள சேப்பாக்கம்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன்  தோனி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் தடுமாறிய டு பிளெஸ்ஸிஸ் 6 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 5 ரன்னிலும், ஷேன் வாட்சன் 10 ரன்னிலும் ,முரளி விஜய் 26 ரன்னிலும் விக்கெட்டை பறி கொடுத்தனர்.

பின்னர் அம்பதி ராயுடு , எம்.எஸ். தோனி கூட்டணியில் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.களத்தில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அம்பதி ராயுடு 42 ரன்னிலும் , எம்.எஸ். தோனி 37 ரன்னிலும் நின்றனர்.

இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 131 ரன்கள்  எடுத்தது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *