சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. உயிர் தப்பிய பயணிகள்!

சென்னை அருகே உள்ள உரப்பாகத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்தை அறிந்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர், காரிலிருந்து கீலே இறங்கியதால் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்த விபத்தால் அங்கு ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.