இந்திய தேசத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது-அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  இந்திய தேசத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது .

மத்திய பட்ஜெட் தாக்கலின் பொது மக்களவையில் “யானை புகுந்த நிலம் போல என்ற புறநானுற்று பாடலை மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது தொடர்பாக  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில்,உலகத்திற்கு தமிழனத்தை அடையாளம் காட்டும் விதமாக புறநானுற்றுப்பாடலை மேற்கோள் காட்டியுள்ளார் நிதியமைச்சர் என்று கூறினார்.