நடிகர் விஜயை பார்ப்பதற்காக பணம் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கிய சிறுவன்!

நடிகர் விஜயை பார்ப்பதற்காக பணம் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கிய சிறுவன்!

கொரோனா வைரஸ் நோயானது முதலில் சீனாவில் தொடங்கி, தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாதித்து வருகிறது. இந்த நோய் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இதனை காட்டுபடுத்துவாதற்காக இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பிரபாலங்கள் மற்றும் மக்கள் பாலரும் உதவி செய்து வருகிற நிலையில், திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் – ஜோதிமணி தம்பதி. இவர்களுடைய மகன் உபநிசாந்த் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட உபநிசாந்த், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசு பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், முதல்பரிசாக கடந்த மூன்று ஆண்டுகளாக பெற்ற பரிசுத்தொகை 3,000 ரூபாயை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்து சிறுவன் உபநிசாந்த் கொடுத்திருக்கிறான். இதுகுறித்து சிறுவனின் தந்தை ரவிக்குமார் அவர்கள் கூறுகையில், ‘எனது பையன் நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன். `எப்படியாவது விஜய்யைப் பார்க்கணும்ப்பா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான்.

நீ ஏதாவது சாதனை செஞ்சா, அவரைப் பார்க்க உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கேன். அப்படி அவரைப் பார்க்கப் போகணும்னா காசு வேணும்னு சொல்லி, நீச்சல் போட்டியில கிடைச்ச பரிசுப் பணத்தை பத்திரமா சேர்த்து வச்சிருந்தான். அந்தப் பணத்தை முதலமைச்சர் நிதி உதவிக்காக எடுத்துக்கொடுத்தான்’ என்று கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube