மாணவியிடம் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பு தலைவரை தெர்ந்தெடும் தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் 13 வயது ஒரு மாணவன் கலந்து கொண்டான் அந்த மாணவன் சக மாணவியிடம் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.

இதனால் அந்த மாணவன் துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.ஆனால் வகுப்பில் உள்ள சக மாணவர்கள் ஒரு பொண்ணுகிட்ட தோல்வியடைத்து விட்ட என கிண்டல் செய்து உள்ளனர்.இதனால் மனமுடைந்த அந்த மாணவன் ரயில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.

இந்நிலையில் ரயில்வே போலீசார் சிட்யால் மற்றும் ரமன்னபேட் ரயில் நிலையத்திற்கு நடுவே ஒரு பள்ளி மாணவனின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அது ஒரு தனியார் பள்ளி மாணவன் என தெரியவந்து.இதற்கிடையில் மாணவனை காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்து உள்ளனர்.

அதன் அடிப்படியில் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடல் அடையாளம் காணப்பட்டது.மாணவன் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்தலால் மனமுடைந்து இறந்து இருக்கலாம் என பெற்றோர்கள் கூறினர்.மாணவனின் மரணம் குறித்து பல கோணங்களில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan