காவல்துறையில் கருப்பு ஆடுகள்….எச் ராஜா கண்டனம்…!

சமூக வலைதளங்களில் மத வெறி தொடர்பாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகள் கல்யாணராமனை எச் ராஜா நேரில் சந்தித்து பேசினார்.அப்போது சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறுகையில் இந்த நாட்டில் தேசியவாதி என்றால் கருத்துரிமை மறுக்கப்படும். மேலும் ஹிந்து மதத்தையும் பிரதமரையும் இழிவுபடுத்திய லயோலா கல்லூரி முதல்வர் மற்றும்  ஓவியர் முகிலன் ஆகியோரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.மேலும் அவர் லயலோ கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகாயத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment