அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும்-மு.க.ஸ்டாலின்

தேனி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  தங்கதமிழ்ச்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம், ஆனால் நடக்கவில்லை தற்போது நடந்துவிட்டது.

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை.

தாய் மொழியாம் தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்து விட கூடாது. அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி தான் முதல்வராக வேண்டுமென முன்மொழிந்தவர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் எனும் பட்டத்தை வழங்கியவர் கருணாநிதி என்று பேசினார்.