தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இதற்கிடையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து அனைத்து அரசியல் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இது குறித்து கூறுகையில், கருத்துக்கணிப்புகளை தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.