யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்தலை நிறுத்திவிடலாம் என அதிமுக நினைக்கிறது- ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,   உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் .உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெறும் நோக்கத்தில் அதிமுக அரசு உள்ளது . முறைப்படுத்தாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும், சந்திக்க தயார்.
நீதிமன்றத்துக்கு சென்று திமுக தடை பெறுவதாக தவறான குற்றச்சாட்டு ஆகும்.நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறு வரையறையை அரசு செய்யவில்லை. புதிய மாவட்டங்களுக்கான மறு வரையறை இன்னமும் செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு ஏராளமான குழப்பங்களை செய்துள்ளது.யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்தலை நிறுத்திவிடலாம் என அதிமுக நினைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.