13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான தேதி அறிவிப்பு .! நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை கங்குலி திட்டவட்டம்

  • 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி  இறுதிப் போட்டி மே 24-ஆம் தேதி நடைபெறும் போட்டி தொடங்கும் நேரத்தில் என கூறினார்.
  • முந்தைய ஆண்டுகளைப் போல இரவு போட்டி 8 மணிக்கு தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறினார்.

டெல்லியில் இன்று பிசிசிஐ நடத்திய கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஐபிஎல் நேர மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.ஐபிஎல் நேரத்தை இரவு 8 மணியிலிருந்து 7 அல்லது 7.30 மணிக்கு மாற்ற ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கூட்டம் முடிந்த பிறகு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ,  இந்த வருடம் நடைபெற உள்ள 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி  இறுதிப் போட்டி மே 24-ஆம் தேதி நடைபெறும் போட்டி தொடங்கும் நேரத்தில் என கூறினார்.

ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் அல்ல மும்பையில் நடைபெறும் எனவும் , மேலும் ஐபிஎல் இரவு விளையாட்டுகளின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய ஆண்டுகளைப் போல இரவு போட்டி 8 மணிக்கு தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறினார்.

மேலும் வழக்கம்போல இரண்டு போட்டிகள் அன்று மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணி மட்டுமே  போட்டி இருக்கும் என கூறினார். விளையாட்டுக்கான இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பி.சி.சி.ஐ வருமானத்தை பொருத்தமான மன்றத்தில் ஒப்படைக்கும் என்று கங்குலி கூறினார்.

இதைத்தொடர்ந்து தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்று வீரர் களமிறங்கும் முறையும் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

author avatar
murugan