தமிழக இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை! – வைகோ கடும் விமர்சனம்!

மத்தியஅரசு பணிகள் குறிப்பாக ரயில்வே பணிகளில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட காலி இடங்களில் கூட வடநாட்டு மாணவர்களே அதிகம் உள்ளனர். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருப்பதால் இங்கு அதிகமான வேலை இல்லா திண்டாட்டம் தொடர்கிறது.

இதனை குறிப்பிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,’தமிழகம் என்ன வேட்டை காடா, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு வேலை தருகிறார்கள். தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மேலும், தமிழக இளைஞர்களுக்கு வேலை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என காட்டமாக தனது கருத்தை தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னர் கூட தமிழக வேலை தமிழருக்கே என டிவிட்டரில் #தமிழகவேலைதமிழருக்கே என்கிற ஹேஸ் டேக் மிகவும் பிரபலமாகி ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment