தமிழகத்தில் வெடி வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் சில விதிகளை விதித்துள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாத சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,372 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.