தாலிகட்டிய பின்னர் நடந்த சம்பவம்!மாப்பிள்ளை உட்பட அதிர்ச்சியில் உறைந்த மண்டபம்!

  • மணமகன் மணமகளின் கழுத்தில் தாலிகட்டிய பின்னர் பெண் கர்ப்பமாக இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • இதன் காரணமாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றன.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த புதன் கிழம் அன்று திருமணம் நடைப்பெற்றுள்ளது.

அதில் தாலிகட்டி பின்னர் மற்ற சடங்குகள் நடைப்பெற்றுள்ளன.அப்போது மணப்பெண்ணும் மணமகனும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்துள்ளனர்.அப்போது மணப்பெண்ணுக்கு உடலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கிருந்தவர்கள் மருத்துவரை வரவழைத்துள்ளனர்.பின்னர் மணப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.அப்போது மாப்பிளை உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார் ,கர்ப்பமான பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததாக கூறி ,மணப்பெண் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த பெண் நண்பர் ஒருவரிடம் பழகியதன் மூலம் கர்ப்பமானது தெரியவந்துள்ளது.இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகினறன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.