நீர்வீழ்ச்சியில் சிக்கிய குட்டியானை! அதனை காப்பாற்றும் முயற்சியில் உயிரை விட்ட 5 யானைகள்!

தாய்லாந்தில் ஒரு நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதனை காப்பாற்ற போராடிய 5 யானைகளும் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டன. மேலும் இரு யானைகள் மீட்கப்பட்டுள்ளன.
 
தாய்லாந்தில் உள்ள கா யே பகுதில் உள்ளது அந்த உயிரியல் பூங்கா. அந்த பூங்காவில் நரக வீழ்ச்சி என கூறப்படும் ஹா நரேக் எனும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அதில் ஒரு குட்டியானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த மற்ற யானைகள் அந்த யானையை காப்பாற்றும் முயற்சியில் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்தன.
இதனால் அந்த குட்டியானையோடு சேர்த்து, 6 யானைகள் இறந்து விட்டன. நீர்வீழ்ச்சியில் சிக்கிய 2 யானைகளை அந்நாட்டு வனத்துறையினரால் காப்பாற்றப்பட்டன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.