ஐசிசி  நீக்கிய பவுண்டரி ரூல்ஸை வரவேற்ற சச்சின் …!

இந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் , நியூசிலாந்து அணியும் மோதியது. இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், பின்னர் சூப்பர் ஓவர் போட்டி  நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தால் அதிக பவுண்டரி அடித்த என்ற விதிப்படி இங்கிலாந்து அணிக்கு கோப்பை கொடுக்கப்பட்டது.
ஐசிசி-யின் இந்த முடிவிற்கு பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை எழுப்பினர். உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்த போது சச்சின் நியூசிலாந்து அணியின்  கேப்டன் வில்லியம்சனுக்கு மைதானத்தில் ஆறுதல் தெரிவித்தார்.
சிறப்பாக விளையாடியதால்  வாழ்த்துக்களும் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி  “பவுண்டரி” விதிமுறையை நீக்கியுள்ளது.போட்டி இனிமேல் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதுவும் சமனில் முடிந்தால் மீண்டும் சூப்பர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது .
இதற்கு சச்சின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். குறித்து சச்சின் கூறுகையில் , இது முக்கியமான முடிவாக  கருதுகிறேன். எப்போது இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெறாத நிலையில் இருக்கிறதோ அப்போது இது ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும் ” என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
murugan