இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது .
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் தான் நேற்று சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை  அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.இதற்கு பின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் என்றும் கூறினார்.
இதற்போது  நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.நாங்குநேரிக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமையில் 4பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.