ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்..!அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை..!!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தில் ஒருநபர் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும் என்று மைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த வடிவில் வந்தாலும், இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 16 ஆசிரியர்கள் மயக்க மடைந்து விட்ட நிலையில் அவர்களை ராஜரத்தினம் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.இதை மறுத்த ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

author avatar
kavitha

Leave a Comment