இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படாது.!

சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதைதொடர்ந்து தமிழகத்தில் இன்று  முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுக்கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்கப்படும்.  நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்படும்.  கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk