1120 கோடி ரூபாய் வருமான வரியெய்ப்பு! இரண்டு மதுபான ஆலைகளின் சுமார் 30 வங்கி கணக்குக்கள் முடக்கம்!

தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்யும் இரண்டு முக்கிய மதுபான ஆலைளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் 55 இடங்களில் நடைபெற்றது.

இதில் கணக்கில் காட்டப்படாத சுமார் 1120 கோடி ருபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 450 கோடி கணக்கில் காட்டப்படாத வருவாயாக இருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்பாக அந்த மதுபான ஆலைகளின் 30 வங்கி கணக்குகள் முடக்க்கப்பட்டுள்ளான. மேலும், மதுபான அலையின் உரிமையாளர், நிர்வாகிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.