தமிழகத்தில் இரண்டாவது நாளாக தீவிர சோதனை! தஞ்சை பெரிய கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்கு 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக இந்திய உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோயம்புத்தூரில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டு நேற்றிலிருந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். சந்தேகத்தின் பெயரில் யாரேனும்  தென்பட்டாலோ,  அதேபோல் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தென்பட்டாலோ  போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், தமிழக முக்கிய புண்ணிய ஸ்தலங்கள், என அனைத்து இடங்களிலும் தீவிர  சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக லக்னோ மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிவிரைவு படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தீவிர போலீஸ்  பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு, உள்ளே செல்லும் பக்தர்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.