மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது-அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இரு மொழிகளையும் பாதுகாக்க, ஒரு மில்லியன் டாலர் வழங்குமாறு, யுனெஸ்கோவிடம் உதவி கேட்டுள்ளோம் .

தமிழர்களின் தொன்மையான ஓலைச்சுவடி, செப்பேடு, பாறை ஓவியங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாஃபா பாண்டியராஜன் கூறினார்.