அனுமதி பெற்றுத்தான் ஜெராக்ஸ் மிஷின் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

மக்களவை தேர்தலுக்கான இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களின் முடிவுகளும் வெளியாக உள்ளது.

திருப்பரங்குன்றம் வாக்குப்பதிவு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன், ‘உரிய அனுமதி பெற்றுதான் திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டு செல்லப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கமானதே.’ என குறிப்பிட்டார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment