தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும் -அமைச்சர் ஜெயக்குமார்

தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம்  உரிமை நிலைநாட்டப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கையில், தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்.
திமுக ஆட்சி காலத்தில் காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.