தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் பாராட்ட வேண்டும்-அமைச்சர் செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி ஐ.நா.வில் புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி பேசியது தமிழகத்திற்கு பெருமை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்  ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில் ,கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஐ.நா.வில் புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி பேசியது தமிழகத்திற்கு பெருமை. தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.